தட்டு, டம்பளரை தூக்கி எறிவேன்… கோபத்தின் உச்சத்தில் – செல்வராகவன் மனைவி பெருமிதம்!

தட்டு, டம்பளரை தூக்கி எறிவேன்… கோபத்தின் உச்சத்தில் – செல்வராகவன் மனைவி பெருமிதம்!

தமிழ் சினிமாவில் முத்தான இயக்குனர்களுள் ஒருவர் செல்வராகவன் இவர் நடிகர் தனுஷின் அண்ணன் என்பது ஊர் அறிந்த ஒன்று. இவர் கஸ்தூரி ராஜாவின் மகனும் கூட. செல்வராகவன் முதன் முதலில் துள்வதோ இளமை படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.

தொடர்ந்து காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ,யாரடி நீ மோகினி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், மாலை நேரத்து மயக்கம், என் ஜி கே உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இரண்டாம் உலகம் படத்தை இழக்கும்போது படத்தில் உதவி இயக்குனராக அவருடன் பணிபுரிந்த கீதாஞ்சலி என்பவரை காதலித்து மறுமணம் செய்து கொண்டார். இவர் முதன் முதலில் காதல் கொண்டேன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்ன சில வருடத்திலே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்.

அதன் பிறகு இரண்டாம் திருமணத்தில் மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவரது மனைவி கீதாஞ்சலி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கணவர் செல்வராகவன் குறித்து பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பெருமையாக பேசி இருக்கிறார்.

அதாவது இரண்டாம் உலக படத்திற்காக அவர் எழுதிய கதையை படித்த பின் தான் அவர் மீது காதல் ஏற்பட்டது. பின்னர் நாட்கள் செல்ல செல்ல எங்கள் காதல் அழகாக சென்றது. அதன் பிறகு நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.

அவர் என்னை மிகவும் அக்கறையுடன் பார்த்துக் கொள்கிறார்.குறிப்பாக தன்னுடைய முதல் பிரசவத்திற்கு பிறகு தாய்ப்பால் சரியாக சுரக்காமல் தான் அதிகமான மனஅழுத்தத்தில் இருந்ததாகவும் அதிகமாக சாப்பிட்டு உடல் எடை அதிகரித்தாகவும் தெரிவித்துள்ளார். நான், அந்த நேரத்தில் கோபத்தில் தட்டு, டம்ளர் போன்றவற்றை தூக்கியெறிவேன் என்றும் அவற்றையெல்லாம் புரிந்துக் கொண்டு, செல்வராகவன் தன்னை சிறப்பாக பார்ததுக் கொண்டதாகவும் கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்.