அடுத்து பிரபாஸை இயக்க உள்ளேன்… திருப்பதியில் இயக்குனர் சந்தீப் ரெட்டி கொடுத்த அப்டேட்

அடுத்து பிரபாஸை இயக்க உள்ளேன்… திருப்பதியில் இயக்குனர் சந்தீப் ரெட்டி கொடுத்த அப்டேட்

இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து இயக்கிய அனிமல் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸானது. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர்களான அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். அனிமல் படம் பெண்ணடிமைத் தனத்தை விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் இந்த படம் 900 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

படத்தை விட இயக்குனர் சந்தீப் ரெட்டி தரும் பேட்டிகள் மிகவும் ஆணாதிக்கத் தன்மை கொண்டதாக உள்ள்தாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதே போல தன்னையும் தன் படத்தையும் விமர்சிப்பவர்களையும் அவர் இடதுகையால் டீல் செய்வது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் அவர் படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறுவதால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி கதாநாயகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

தன்னுடைய அனிமல் படத்தின் வெற்றியை அடுத்து சந்தீப் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார். அப்போது அவரிடம் பத்திரிக்கையாளர்கள் அடுத்த படம் பற்றி கேட்ட போது “அடுத்து பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் படத்தை இயக்கப் போகிறேன்” என பதிலளித்துள்ளார்.