அப்பாவி புருஷனை ஏமாற்றிய சமந்தா…? வைரலாகும் பதிவு!

அப்பாவி புருஷனை ஏமாற்றிய சமந்தா…? வைரலாகும் பதிவு!

இந்திய சினிமாவின் நட்சத்திர நடிகையான சமந்தா தெலுங்கு சினிமாவில் பிரபல இளம் ஹீரோவாக வலம் வைத்துக்கொண்டிருக்கும் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், இவர்களது திருமண வாழ்க்கை வெறும் நான்கு வருடங்களிலே முடிவுக்கு வந்துவிட்டது.

இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்து ஒருவருக்கொருவர் தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள். தொடர்ந்து சமந்தா தமிழ் திரைப்படங்களிலும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்தியில் வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமந்தா சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றின் வீடியோவை பார்த்த ரசிகர் ஒருவர், ஏன் உங்கள் அப்பாவி கணவர் நாகசைதன்யாவை ஏமாற்றினீர்கள் என கேட்டிருந்தார். இதற்க்கு பதிலடி கொடுத்த சமந்தா, “சாரி , நான் வீடியோவில் பேசியிருக்கும் விஷயங்கள் உங்களுக்கு உதவாது என நினைக்கிறேன். இதைவிட உங்களுக்கு இன்னும் வலிமையான விஷயம் தேவைப்படும். நல்லா இருங்க..” என பதிலடி கொடுத்துள்ளார். சமந்தாவின் இந்த பளார் பதில் வைரலாகி வருகிறது.