நேர்காணலில் இருந்தபோது வந்த அதிர்ச்சி… விவாகரத்து குறித்து மனம் திறந்த டிடி!

நேர்காணலில் இருந்தபோது வந்த அதிர்ச்சி… விவாகரத்து குறித்து மனம் திறந்த டிடி!

தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளியாக இருந்து வருபவர் டிடி. இவர் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான ஆங்கர் ஆக வலம் வந்து கொண்டிருந்தார். குறிப்பாக பிரபலங்களை வைத்து இவர் நேர்காணல் நடத்தும் நிகழ்ச்சியான காபி வித் டிடி ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஃபேமஸான ஒரு நிகழ்ச்சியாக பார்க்கப்பட்டு வந்தது.

2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்ற தனது நெருங்கிய நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் டிடி மிகப் பிரம்மாண்டமாக கோலாலமாக நடைபெற்ற இந்த திருமணம் ஒரு சில வருடத்திலேயே விவாகரத்து ஆகி இருவரும் பிரிந்து விட்டார்கள். இது குறித்து டிடி வெளிப்படையாக என்ன நடந்தது என கூறவே இல்லை. தற்போது முதல் முறையாக அல்லது விவாகரத்து குறித்து பேசி இருக்கும் டிடி, எனக்கு வாழ்க்கையில் நடந்த விவாகரத்து என்னால் மறக்கவே முடியாது.

அந்த சமயத்தில் எனக்கு மனம் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே போதும் என்று நினைத்து நான் விவாகரத்து முடிவை எடுத்தேன். அது மிகவும் கஷ்டமாகவும் மன வேதனையும் கொடுத்தது. ஆனால் அதிலிருந்து நான் மீண்டு வர தொடர்ந்து வேலையில் அதிக கவனத்தை செலுத்தி இடைவிடாமல் வேலைக்கு சென்று கொண்டிருந்தேன்.

நான் இந்த நடிகை ரம்யா கிருஷ்ணனை நேர்காணல் செய்து கொண்டிருந்தபோதுதான் எனக்கு விவாகரத்து உறுதியான தகவல் கிடைத்தது. எல்லாம் முடிந்துவிட்டது நம் வாழ்க்கையில் என்று மனதை தேற்றிக்கொண்டு அந்த நேர்காணலை தொடர்ந்து எடுத்தேன். அது என்னால் மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருந்தது. நான் மீடியா வெளிச்சத்தில் இருந்தால் இன்று வரை அந்த விவாகரத்து சர்ச்சைகளில் இருந்து மீண்டு வரவே முடியவில்லை என வருத்தத்தோடு கூறினார் டிடி.