“புலி” திரைப்படம் அட்டர் பிளாப் ஆனதுக்கு இதுதான் காரணம்!

“புலி” திரைப்படம் அட்டர் பிளாப் ஆனதுக்கு இதுதான் காரணம்!

தளபதி விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் உருவாகி கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் புலி. இந்த திரைப்படம் வெளியாகி அட்டர் பிளாப் ஆகிவிட்டது. யாரும் எதிர்பார்க்காத வகையில் பெரும் தோல்வியை சந்தித்த இந்த திரைப்படத்தை இயக்குனர் சிம்பு தேவன் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் ,பிரபு ,ஸ்ரீதேவி ,தம்பி ராமையா உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இந்நிலையில் புலி படம் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை கூறியுள்ள அப்படத்தின் இயக்குனர், புலி படத்தில் எல்லா வேலைகளையும் சரியாக செய்தேன்.

ஆனால். அந்த சமயத்தில் ரெய்டு உள்ளிட்ட பிரச்சனைகளால் படம் வெளியானதும் கடும் விமர்சனங்களை சந்தித்தது. இம்சை அரசன் படம் போலவே அனைவருக்குமான படமாக ரசிகர்களை கவரும் என்று எதிர்ப்பார்த்தேன். ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவில் ரசிகர்களை கவர தவறிவிட்டது என படத்தின் இயக்குனர் சிம்புதேவன் கூறியுள்ளார்.