ஒருதலை பட்ஷமாக செயற்பட்டதால் ஒருவனிலிருந்து நீக்கப்பட்ட வித்தியாதரன்!

ஒருதலை பட்ஷமாக செயற்பட்டதால் ஒருவனிலிருந்து நீக்கப்பட்ட வித்தியாதரன்!

 

ஒருதலைப் பட்ஷமாக நடந்ததால் வித்தியாதரனை ஒருவன் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து நிர்வாகம் விலக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல சர்ச்சைகளுக்குள்ளும் விமர்சனங்களுக்குள்ளும் அடிக்கடி மாட்டிக்கொள்கின்ற வித்தியாதரன், சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒருவன் பத்திரிகையின் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டிருந்த வேளையில் அவர் ஒருதலை பட்ஷமாக செயற்பட்டு வந்ததன் காரணத்தினால் ஒருவன் ஊடக நிறுவனம் அவரை வேலையில் இருந்து நீக்கி உள்ளதாக அறிவித்திருக்கின்றது.

ஆனால் வித்தியாதரனோ வேறு விதமான காரணத்தை தெரிவித்திருக்கின்றார்.

அதாவது அவர் தன்னை சுதந்திரமாக செயற்பட இந்த நிர்வாகம் அனுமதிக்கவில்லை அதனால்தான் நான் விலகியிருக்கிறேன் என அவர் அறிவித்திருக்கின்றார்.

ஆனால் உண்மையில், அவர் ஒருதலைப் பட்ஷமாக செயற்பட்டதாலே ஒருவன் ஊடக நிர்வாகத்தினரால் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.