ARREST ஆகும் போது பொலிஸ் துப்பாக்கியை எடுத்து சுட்ட பெண் கதறிய பொலிஸ் அதிகாரி !

ARREST ஆகும் போது பொலிஸ் துப்பாக்கியை எடுத்து சுட்ட பெண் கதறிய பொலிஸ் அதிகாரி !

மார்கெட் ஒன்றில் பெரும் அடாவடியில் ஈடுபட்ட பெண்ணை அடக்க என பொலிசார் வந்தார்கள். அவர்கள் எவ்வளவோ சொல்லியும் அந்தப் பெண் அடங்கவில்லை. ஏற்கனவே ஒருவரை கன்னத்தில் அறைந்ததோடு, அங்கே உள்ள சில பொருட்களை களவாடியும் இருந்தார். இதனால் வேறு வழி இல்லாமல் அந்தப் பெண்ணை பொலிசார் கைதுசெய்யவேண்டி வந்தது. அவர்கள் அந்தப் பெண்ணின் கைகளில் கை விலங்கைப் போட்டு, கூட்டிச் சென்றவேளை யாரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது.

தன்னைக் கொண்டு சென்ற அதிகாரியின் துப்பாக்கியை சற்றும் எதிர்பாராத விதமாக அந்தப் பெண் எடுத்துவிட்டார். இதனைப் பார்த்த மற்றைய பொலிஸ் அதிகாரி பதறி அடித்துக் கொண்டு அங்கே இருந்து வேறு திசைக்கு குதித்தார். அவர் நினைத்தது போலவே அந்தப் பெண் உடனே சுட ஆரம்பித்து விட்டார். இதனால் மார்கெட்டில் நின்றிருந்த அப்பாவிப் பொதுமக்களில் 3 பேர் காயமடைந்துள்ளார்கள்.

பின்னர் ஒருவாறு அந்தப் பெண்ணை மடக்கிப் பிடித்த பொலிசார் கையில் இருந்த துப்பாக்கியை பறித்துள்ளார்கள். கடந்த திங்கள் அன்று சில்லி நாட்டில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிர்வின் வாசகர்களுக்காக கீழே வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. எப்படி கிளீன் -டு விஸ்ட் ஸ்டைலில் அவர் துப்பாக்கியை எடுக்கிறார் என்று பாருங்கள்.