இந்தி படத்தில் இருந்து விலக இதுதான் காரணம் – ஜோதிகா பளீச்!

இந்தி படத்தில் இருந்து விலக இதுதான் காரணம் – ஜோதிகா பளீச்!

மும்பையில் பிறந்த வளர்ந்தாலும் தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகர் ஆக வலம் வந்தவர் தான் நடிகை ஜோதிகா. இவர் முதன் முதலில் ஹிந்தியில் வெளிவந்த Doli Saja Ke Rakhna என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார்.

முதல் படத்திற்கு பிறகு பாலிவுட் திரை பாலிவுட் திரைப்படங்களில் ஜோதிகா நடிக்கவே இல்லை. அதன் பிறகு தென்னிந்திய மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருந்தும் மார்க்கெட் பிடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தும் கூட அவர் பாலிவுட் படங்களுக்கு செல்லவே இல்லை.

இதனிடையே சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பிறகும் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா தொடர் சினிமாவில் நடித்து வந்தார். சமீப காலமாக மும்பைக்கு சென்று செட்டிலாகி இருக்கும் ஜோதிகா தற்போது ஹிந்தி படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆகி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் முதன் முதலில் நடித்த படத்தோடு ஹிந்தி படங்களில் நடிக்காததற்கு போகாததற்கு காரணம் என்ன? தற்போது 28 வருடங்களுக்கு பிறகு நடித்து வருவதற்கு காரணம் என்ன என கேட்டதற்கு, என்னுடைய முதல் இந்தி படம் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்து விட்டது.

அதன் பிறகு என்னை யாருமே படங்களில் நடிக்க கூப்பிடவே இல்லை. அந்த சமயத்தில் தான் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக பல்வேறு ஹிட் படங்களில் நடித்தேன். அப்போ கூட யாரும் என்னை பாலிவுட் படங்களுக்கு கூப்பிடவில்லை. இப்போது எனக்கு வாய்ப்புகள் வருகிறது. அதனால் அங்கு சென்று தொடர்ச்சியாக நடிக்கிறேன் என கூறி இருக்கிறார்.