மனித குடலில் காணப்படும் ரில்லியன் பக்ரீரியாக்கள் ஒருவர் மன நிலையைக் கூட மாற்ற வல்லவை என்பது தெரியுமா ?

மனித குடலில் காணப்படும் ரில்லியன் பக்ரீரியாக்கள் ஒருவர் மன நிலையைக் கூட மாற்ற வல்லவை என்பது தெரியுமா ?

உன் முதுகை நான் சொறிந்து விடுகிறேன், என் முதுகை நீ சொறிந்து விடு என்று சொல்வார்களே… அது போலத் தான் இந்த பக்ரீரியாக்கள். இவை தாமும் வாழ்ந்து எம்மையும் வாழவைக்கிறது.

மனித உடலில் பல பக்ரீரியாக்கள் வாழ்கிறது. அது அதிகமாக வாழும் இடம் குடல் ஆகும். இங்கே 1 ரில்லியன் பக்ரீரியாக்கள் வாழ்கிறது. இவை பல்வேறுபட்ட செயல்பாட்டில் உள்ளது. பொதுவாக இந்த பக்ரீரியாக்கள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பது இல்லை. மாறாக, தாமும் இனப்பெருக்கம் செய்து மனிதருக்கும் நன்மை தருகிறது. உதாரணமாக நாம் உட்கொள்ளும் தயிரில் ஒரு வகையான பக்ரீரியா உள்ளது. இது செமிபாட்டுக்கு உதவுகிறது.

அத்தோடு அவை உடல் சூட்டை குறைக்க வல்லவை. உடலை குளிராக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் தற்போது விஞ்ஞானிகள் என்ன கண்டுபிடித்து உள்ளார்கள் என்றால், இந்த பக்ரீரியாக்களில் சில, மனித மூளையைக் கூட கட்டுப்படுத்த வல்லவை என்பது தான். இவை சுரக்கும் சில பதார்த்தங்கள், ரத்தத்தில் கலந்து , மூளைக்குச் செல்லும் வேளையில், மூளை சாந்தம் அடைகிறது. மிகவும் டென்ஷனாக உள்ள நபர்கள், அல்லது மன நிலை குழம்பியுள்ள நபர்களைக் கூட இந்த பக்ரீரியா ஒரு அளவுக்கு சீர் செய்ய வல்லது என்று கண்டு பிடித்துள்ளார்கள்.

இதனால் இனி மருத்துவர்கள், செய்ய உள்ள மருத்துவத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ உள்ளது. அதாவது மாத்திரைக்கு பதிலாக அவர்கள் ஒரு வகையான பக்ரீரியாக்களை எமக்கு மாத்திரையாக தர உள்ளார்கள்.

மனித இனம் முதலில் கடல் நீரில் தான் தோன்றி இருக்க வேண்டும். பின்னரே படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைந்து அந்த உயிரினம், தரையில் வாழ கற்றுக் கொண்டது. ஆதி மனிதர்கள், பெண் மற்றும் ஆண் , கலந்தவர்கள். ஆண் வேறு பெண் வேறு அல்ல. இரு பாலும் இணைந்த ஒரு கலவை. அவர்கள் ஆணும் அல்ல பெண்ணும் அல்ல. பெண்ணுக்கு ஆண் துணை தேவை இல்லை. ஆணுக்கு பெண் துணை தேவையும் இல்லை. இந்த ஒரு பால் இன மனிதர்கள், உடல் உறவு இன்றி, பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டார்கள். இதனால் தான், தற்போது கூட பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி, மார்பகங்கள் இருக்கிறது. மேலும் சொல்லப் போனால்…

உணவை உண்ணும் போது உப்பு இல்லை என்றால் எம்மால் உண்ணவே முடியாது. இது நாம் கடல் நீரில் முதன் முதலில் உருவாகினோம் என்பதற்கான அத்தாட்சி. அது போக நவீன மனிதர்கள் கூட அம்மாவின் கருவறையில் உள்ள பன்னீர் குடத்தில் தான் இருந்து வளர்கிறார்கள். பன்னீர் குடத்தில் காணப்படும் நீர், உப்புக் கரிக்கும்.. மேலும் சொல்லப் போனால், மரபணு ஞாபகம்(Genetic Memory) என்பார்கள். உங்களுக்கு தெரியுமா , மனிதர்களின் DNA யில் கிகாபைட் க்கு அப்பால், (petabytes)என்ற அளவில் டேட்டாக்கள் பதிவாகி உள்ளது.

தேல் நிறம், உடல் எடை, உயரம், ஆணா இல்லை பெண்ணா, உடல் கட்டமைப்பு, ஞாபக சக்தி, சாந்த குணம், அடாவடி, கலை, சண்டை, கலகம், அமைதி, உண்மை பேசுதல், போலியாக நடித்தல் இப்படி அனைத்துக் குணங்களும் பெற்றோரில் இருந்து தான் பிள்ளைகளுக்கு கடத்தப்படுகிறது. ஒட்டு மொத்ததில் சொல்லப் போனால் 90% சத விகிதமான குணங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டி, கொள்ளு பாட்டி என்று அவர்கள் இடத்தில் இருந்து தான் கடத்தப்பட்டு இருக்கும். சிலர் அடிக்கடி குளிக்க மாட்டார்கள். சிலர் அடிக்கடி குளித்து, சுத்தமாக இருப்பார்கள், இந்தக் குணங்கள் கூட, சந்ததியில்(DNA) இருந்து கடத்தப்படுகிறது என்பதே உண்மை.

சந்ததி மரபணு கடத்தல் (Genetic Memory) என்பது ஒரு பெரும் கடல். அதனைப் பற்றிச் சொல்லப் போனால் , உங்களுக்காக நான் நான் வேறு ஒரு செய்தியை எழுதவேண்டி இருக்கும். எனவே நாம் எடுத்துக் கொண்ட விடையம், இரு பக்கமும் நன்மை அடையும் பக்ரீரியாக்கள் பற்றியது. எனவே மனிதரின் மன அழுத்தத்தை மாற்றக் கூடிய சக்தி படைத்தது இந்த பக்ரீரியாக்கள், என்பதனை நாம் மறந்து விடக் கூடாது. இது தொடர்பான ஆய்வு ஜூன் 10 திகதி முதல் ஆரம்பமாகியுள்ளது. இதனையே நாம் இங்கே அதிர்வில் செய்தியாக இணைத்துள்ளோம். Genetic Memory தொடர்பாக ஏதாவது தகவல் தேவை என்றால் எம்மை, இந்த மின்னஞ்சல்([email protected]) மூலமாக தொடர்பு கொள்ள முடியும் .
அதிர்வுக்காக
கண்ணன்