Bournemouth கடல் கரையில் 15 வயதுப் பெண்ணைக் கற்பழித்த இளைஞர்- மக்கள் பதற்றம் !

Bournemouth கடல் கரையில் 15 வயதுப் பெண்ணைக் கற்பழித்த இளைஞர்- மக்கள் பதற்றம் !

பிரிட்டன் போன் மவுத் கடல் கரையில் வைத்து, 15 வயதுப் பெண்ணைக் கற்பழித்த இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேப்ரியல் என்ற 20 வயது இளைஞரே இவ்வாறு நடந்துகொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். பிரித்தானியாவில் உள்ள போன் பவுத் கடல் கரை என்பதும் மிகவும் பிரபல்யமான ஒரு சுற்றுலா தலம். இங்கே ஆண்டுதோறும் பல லட்சம் மக்கள் சென்று வருகிறார்கள்.

கடந்த ஆண்டு கோடை காலத்தில், மக்கள் அதிகம் அங்கே குளித்துக் கொண்டு இருந்த சமயம், கடல் கரையில் வைத்து குறித்த 15 வயதுப் பெண்ணை கற்பழித்துள்ளார் இந்த 20 வயது நிரம்பிய கேப்பிரியல். இதனை பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்கள். மேலும் சிலர் வீடியோ எடுத்து தமது இன்ஸ்டாவில் போட்டு, லைக் பெற முயற்ச்சி செய்துள்ளார்கள் என்றால் பாருங்கள்… எங்கே எமது உலகம் சொன்றுகொண்டு இருக்கிறது என்று.

துணிவுள்ள சில இளைஞர்கள் உடனே சென்று அன் நபரை பிடித்து இழுத்து மடக்கிப் பிடித்து, பின்னர் பொலிசாரிடம் கையளித்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து பொலிசார் வழக்குப் பதிவு செய்த நிலையில் கடந்த வெள்ளி(19) அன்று அவர் குற்றவாளி என்று இனம் காணப்பட்டுள்ளார்.