மச்சினியிடம் ஆட்டைய போட்டதை தற்போது யூஸ் பண்ணும் நடிகர் தனுஷ்..!

மச்சினியிடம் ஆட்டைய போட்டதை தற்போது யூஸ் பண்ணும் நடிகர் தனுஷ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகளாகிய சௌந்தர்யா ரஜினிகாந்த் அனிமேஷன் துறையில் படிப்பை முடித்தவர். இதனை அடுத்து தான் இவர் தனது தந்தையை வைத்து கோச்சடையான் எனும் அனிமேஷன் படத்தை உருவாக்கினார்.

இந்த படத்தின் பாடல்கள் ஹிட் கொடுத்ததைப் போல படம் பெரிய அளவு மக்கள் மத்தியில் ரீச் ஆகவில்லை. இதனை அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்க இருந்த திரைப்படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.

இந்த திரைப்படத்தை தனுஷ் மற்றும் காஜல் அகர்வால் வைத்து படம் பிடிக்கலாம் என்று கதையை ரெடி செய்து இருந்தார்கள். ஆனால் கதைக்கு ஏற்றபடி சரியான நடிகர்கள் யாரும் கிடைக்காத காரணத்தால் படத்தை கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் தனுஷ் வேலை இல்லாத பட்டதாரி 2 மற்றும் கொடி படப்பிடிப்பில் இருந்த காரணத்தால் ஸ்கிரிப்ட்டை சௌந்தர்யாவிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

மேலும் சௌந்தர்யா தயாரிப்பாளர் தாணுவிடம் இப்படம் குறித்து பேச, அவரும் தயாரிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து விஐபி 2 முடிவாகி படமும் ரிலீஸ் ஆனது. வேல்ராஜ் இயக்கத்தில் உருவான முதல் பாகம் மற்றும் சௌந்தர்யா இயக்கத்தில் இரண்டாம் பகுதி பெரிய அளவு ஹிட் ஆகவில்லை.

எனவே தற்போது தனுஷ் மச்சினியின் தலைப்பை தான் இயக்கும் மூன்றாவது படத்திற்கு வைத்திருக்கிறார். இந்த படத்தில் அனிகா, மேத்யூ ஆகியோர் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளி வந்து படத்தின் பாஸ்ட் லுக் வெளி வந்தது.

இதனை அடுத்து ரசிகர்கள் நடிகர் தனுஷ் தனது முன்னாள் மச்சினி இடம் இருந்து தலைப்பை இப்படியா ஆட்டைய போட்டுட்டாரு என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருவதோடு இந்த விஷயத்தையும் பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் தற்போது திரை உலகில் பட தலைப்பில் இருந்து பாடல், இசை வரை அனைத்தும் காப்பியாக இருப்பது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்படியா? அறிவுக்கு பற்றாக்குறை ஏற்பட வேண்டும் என்று முணு முணுத்து வருகிறார்கள்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *