தொழிலதிபர் ஆன இயக்குனர் நெல்சன் திலீப் குமார்… கோடிக்கணக்கில் முதலீடு!

தொழிலதிபர் ஆன இயக்குனர் நெல்சன் திலீப் குமார்… கோடிக்கணக்கில் முதலீடு!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல இயக்குனராக பார்க்கப்படுபவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இவர் கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடிகை நயன்தாராவை வைத்து இயக்கி மாபெரும் வெற்றி படத்தை கொடுத்து முதல் படத்திலேயே தனது வெற்றியை பதித்தார்.

அதை தொடர்ந்து டாக்டர் ஜெய்லர் என தொடர்ந்து அடுத்தடுத்து ஹிட் ஹீரோக்களை வைத்து படம் இயக்கி பிரபலமான நடிகராக தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படத்தை இயக்கி வந்த இவர் திடீரென கோடி கணக்கில் முதலீடு செய்து புதிய பிசினஸ் தொடங்கி தொழிலதிபராகி இருக்கிறார்.

ஆம் பல கோடி முதலீடு செய்து Filament Pictures என்ற இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருப்பதாகவும் இது தனது நீண்ட நாள் ஆசை என்றும் நெல்சன் கூறி இருக்கிறார். மேலும் கூடிய விரைவில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் பற்றிய அறிவிப்பு மே 3ம் தேதி வெளியிடப்படுவதாக அவர் அறிவித்து ரசிகர்களை அலார்ட் செய்திருக்கிறார்.