நடுக்காட்டில் 40 நாள் வனவாசம்… துயரமான அனுபவத்தை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்!

நடுக்காட்டில் 40 நாள் வனவாசம்… துயரமான அனுபவத்தை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்!

தென்னிந்திய சினிமாவின் முன்னனி நடிகையான கீர்த்தி சுரேஷ் கைவசம் தற்போது ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இதனிடையே அக்கா என்ற வெப்து தொடரில் கீர்த்தி சுரேஷ்நடித்து வருகிறார்.

தர்மராஜ் செட்டி இயக்கிவரும் இந்த தொடரில் ராதிகா ஆப்தே கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த தொடரின் படப்பிடிப்பு கடந்த 40 நாட்களுக்கும் மேலாக கேரளாவில் நடந்து முடிந்துள்ளது. அது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள கீர்த்தி சுரேஷ்

கேரளாவில் 40 நாட்கள் வனவாசம் இருந்துவிட்டு மீண்டும் சமூக ஊடகங்களில் வந்துள்ளேன். AKKA ஷூட்டிங்
முடித்துவிட்டு வீடு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது.இப்போது எனது மற்ற படப்பிடிப்பிற்கு திரும்ப காத்திருக்க முடியாது.. மேலும், எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்னவென்றால் மழை வெப்பத்தைத் தணித்தது என கூறியுள்ளார்.