கருமுட்டையை பாதுகாக்க போகிறேன் – மிருணாள் தாகூர் அதிர்ச்சி தகவல்!

கருமுட்டையை பாதுகாக்க போகிறேன் – மிருணாள் தாகூர் அதிர்ச்சி தகவல்!

திரைப்பட நடிகைகள் பொறுத்தவரை பெரும்பாலும் வெகு சீக்கிரத்திலே இளம் வயதிலே திருமணம் செய்து கொள்ளவே மாட்டார்கள். மார்க்கெட் இருக்கும் வரை நடித்துவிட்டு முடிந்த அளவுக்கு லட்சக்கணக்கில் கோடி கணக்கில் பணம் சொத்து சம்பாதித்த பிறகுதான் திருமணம் செய்து கொள்ளவே முன் வருவார்கள். அதிலும் குறிப்பாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு கிட்டத்தட்ட 50 வயதை நெருங்கும் போது தான் தோணவே ஆரம்பிக்கும்.

அப்படித்தான் பல நடிகைகள் சினிமாவில் மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்தபோது திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளி போட்டுக்கொண்டு பின்னர் 40, 48 கிட்டத்தட்ட 50 வயது ஆன பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தார்கள். அதில் முக்கியமானவர் ராம்சரனின் மனைவி உபாசனா. இவர் சமீபத்தில் பெண் குழந்தை பெற்றெடுத்தார் இவருக்கு 10 வருடங்களுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் தனது கருமுட்டைகளை இளம் வயதாக இருந்தபோது எடுத்து ப்ரீஸ் செய்து வைத்து அதன் பிறகு தங்கள் வாழ்க்கையில் சேட்டில் ஆகிய பிறகு 10 வருஷத்துக்கு பிறகு தற்போது குழந்தை பெற்றிருக்கிறார். அதே பார்முலாவை பிரபல நடிகையான மிருணாள் தாகூர் பாலோ பண்ண உள்ளாராம். இந்த முடிவை தற்போது அவர் 31 வயதில் எடுத்திருக்கிறார். தற்போது தன்னுடைய கருமுட்டை எடுத்து பிரீஸ் செய்து வைத்து கிட்டத்தட்ட 45 வயதில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என அவர் வெளிப்படையாக கூறி இருக்கிறார்.