மனைவியை பிரிந்துவிட்டேன்… காரணத்துடன் கூறி கண்ணீர் விட்ட நடிகர்!

மனைவியை பிரிந்துவிட்டேன்… காரணத்துடன் கூறி கண்ணீர் விட்ட நடிகர்!

சினிமா பொருத்தவரை ஒரே விதிவிலக்கு தான் திறமையுள்ள மனுஷனை வாழவும் வைக்கும் அதே திறமையுள்ள மனிதனை அழிக்கவும் செய்யும் அது அவரவர் கைகளில் தான் உண்டு. தான் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என இறங்கிவிட்டால் அதை மட்டுமே லட்சியமாக கொண்டு முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து நம்பிக்கையுடன் உழைத்தால் மட்டுமே இலட்சியத்தை அடைய முடியும்.

அப்படி இருந்தாலும் இங்கு நடக்கும் வாரிசு நடிகர்கள் முன்னர் திறமை ஒன்றுமே பண்ணமுடியாது கீழே தாழ்த்தி விடும். ஆனால் அதையும் தாண்டி ஒருவர் ஜெயித்து வருவதெல்லாம் கடவுள் கொடுத்த அதிர்ஷ்டம் தான் என்று சொல்ல வேண்டும். அப்படி தனக்கு மிகப்பெரிய திறமை இருந்து லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர்தான் ஆண்டனி.

இவர் சந்தானம் உடன் சேர்ந்து செய்த காமெடிகள் இன்றளவும் மக்களால் மறக்க முடியாது. அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஒரு சில படத்தில் நடித்த லொள்ளு சபா ஆண்டனி எங்கே போனார்? இத்தனை ஆண்டுகள் என்ன செய்து கொண்டிருக்கிறார் என பலருக்கும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது மிகவும் கோரமான நிலையில் ஆபத்தாக உயிருக்கு போராடி இருக்கும் நிலையில் அவர் பேட்டி ஒன்று கொடுத்திருப்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது

ஆம், அந்த பெட்டியில் பேசிய ஆண்டனி, “நான் இப்போ தனியா தான் இருக்கேன். சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று இருந்தேன். ஒரு கட்டத்தில் என்னுடைய மனைவிக்கு என் மீது வெறுப்பு ஏற்பட்டது. அதனால் நானும் என் மனைவியும் பிரிந்து தான் வாழ்கிறோம். என்னையே நான் தான் பார்த்துக்கொள்கிறேன். என் உடலில் பல பிரச்சனைகள் இருக்கிறது.என்னுடைய தீய நண்பர்களால் என் பணம், வீடு எல்லாமே என்னை விட்டு சென்றது. ஆனால் கஷ்டத்தில் இருக்கும் போது அவர்கள் எனக்கு உதவி செய்யவில்லை. சந்தானம் தான் உதவி செய்தார்” என்று லொள்ளு சபா ஆண்டனி கூறியுள்ளார்.