மீண்டும் இணையும் பொன்னியின் செல்வன் ஜோடி… குஷ்பு தயாரிப்பில் இயக்குனராக அறிமுகமாகும் பிரபலத்தின் மகள்!

மீண்டும் இணையும் பொன்னியின் செல்வன் ஜோடி… குஷ்பு தயாரிப்பில் இயக்குனராக அறிமுகமாகும் பிரபலத்தின் மகள்!

கடந்த 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸானது. முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் அந்தளவுக்கு கவனம் பெறவில்லை.

இந்த படத்தில் இளம் வயது ஆதித்த கரிகாலன் மற்றும் நந்தினியாக சந்தோஷ் மற்றும் சாரா அர்ஜுன் ஆகியோர் நடித்திருந்தனர். அவர்களின் ஜோடி இளம் ரசிகர்களிடம் நல்ல கவனத்தைப் பெற்றது. இதையடுத்து அவர்கள் இருவரும் இப்போது ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளார்கள். இந்த படத்தை மறைந்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ஜீவாவின் மகள் சனா மரியம் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து உருவாகும் என சொல்லப்படும் இந்த படத்த குஷ்பு தன்னுடைய அவ்னி சினிமாஸ் மூலமாக இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.