திருமண உறவில் சலிப்பு… கணவரை பிரிந்து வாழும் சினேகா!

திருமண உறவில் சலிப்பு… கணவரை பிரிந்து வாழும் சினேகா!

நடிகை சினேகா கடந்த 2012ம் ஆண்டு பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து கொஞ்சம் ஓய்வெடுத்திருந்த அவர் பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் அவ்வப்போது தமிழ், தெலுங்கில் கிடைக்கும் வாய்ப்புகளிலும் நடித்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமண வாழ்வின் பல ரகசியங்களை வெளிப்படையாக கூறியுள்ள நடிகை சினேகா. ” நங்கள் இருவரும் திருமணத்திற்கு பின்பும் பிரைவசிக்காக தனி தனியாக பிரிந்து தன வாழ்ந்து வந்தோம். ஆரம்ப கட்டத்தில் வீடு கிடைக்கவில்லை. அதனால் நான் என் வீட்டுக்கு சென்றுவிட்டேன்.

இதனிடையே எங்கள் திருமண வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டது.அது மாதிரியான நேரத்தில் நாங்கள் இரவு டேட்டிங் செல்வோம். அந்த சமயத்தில் பல நினைவுகளை பற்றி பேசுவோம். அப்போது எங்களுக்கு இடையே உள்ள ஸ்பார்க் மீண்டும் வரும். அடிக்கடி அடிக்கடி வரும் ஆனால் சண்டை முடிந்த பிறகு இவருடைய கருத்தையும் புரிந்துகொள்வோம் என்று சினேகா கூறியுள்ளார்.