மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது… லேட்டஸ்ட் தகவல்!

மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது… லேட்டஸ்ட் தகவல்!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் கபடி பயிற்சியெல்லாம் எடுத்தார்.

கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால் மாமன்னன் படத்தில் கமிட் ஆனதால் அந்த படம் தள்ளிவைக்கப்பட்டது. அந்த படத்தை முடித்த மாரி செல்வராஜ் வாழை என்ற தான் தயாரித்து இயக்கும் படத்தைத் தொடங்கினார்.

வாழை படத்தின் ஷூட்டிங் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் மார்ச் 15 ஆம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இதற்கான ஆரம்பகட்ட வேலைகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.