தங்கத் தாமரை மகளே வா அருகே…. அம்பானி வீட்டு கல்யாணத்தில் கணவருடன் நயன்தாரா!

தங்கத் தாமரை மகளே வா அருகே…. அம்பானி வீட்டு கல்யாணத்தில் கணவருடன் நயன்தாரா!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணயக்குனர் விக்னேஷ் சிவனை நானும் ரவுடிதான் திரைப்படத்திலிருந்து காதலிக்க துவங்கி சுமார் 8 வருடம் காதலித்தது பிறகு பெற்றோர் சம்மதத்துடன் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஒரு சில மாதத்திலேயே நயன்தாரா வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.

குழந்தை பிறப்பிற்கு பிறகும் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக அன்னபூரணி திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்திருந்தார். மேலும், பாலிவுட் சினிமாவில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் அவர் ஹிந்தியில் கால் தடம் பதித்து அங்கும் நட்சத்திர நடிகையாக தற்போது பார்க்கப்பட்டு வருகிறார்.

அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நயன்தாரா கேஜிஎப் நடிகர் யாஷ் அவர்களுடன் டாக்சிக் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து அம்பானியின் மகன் அனந்த அம்பானியின் திருமணத்தில் பங்கேற்றுக் கொண்டார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ள அவர் கணவருடன் ரொமான்டிக் போட்டோ வெளியிட்டு லைட்ஸ் அள்ளியுள்ளார்.