சும்மா கத்தியை எடுத்து வெருட்ட நினைத்தேன் ஆனால் அவனே வந்து விழுந்து இறந்து விட்டான்

சும்மா கத்தியை எடுத்து வெருட்ட நினைத்தேன் ஆனால் அவனே வந்து விழுந்து இறந்து விட்டான்

15 வயது வெள்ளை இன மாணவர் ஒருவர், 17 வயது மொகமெட்டை நெஞ்சில் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். கடந்த வெள்ளியன்று நீதிமன்றில் குறித்த 15 வயதுச் சிறுவன் கூறிய வாக்குமூலம் அனைவரையும், முட்டாள் ஆக்கும் வகையில் அமைந்துள்ளது. கொலைசெய்யப்பட்ட மொகமெட்டை தான் பயமுறுத்தவே அந்தக் கத்தியை தான் கொண்டு சென்றதாக அவர் தெரிவித்துள்ளாற்.

அந்தக் கத்தியை பார்த்த மொகமெட், உடனே பதறியடித்து திடீரென அந்தக் கத்தி மீது விழுந்து இறந்து போய் விட்டதாக இந்த 15 வயதுச் சிறுவன் தெரிவித்துள்ளார். அவர் கடைசி வரை குற்றத்தை ஒப்புக்கொள்ளவே இல்லை. தன்னை நியாயப்படுத்தவே முனைந்து வருகிறார். ஆனால் அவருக்குத் தெரியவில்லை, குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்றால், தண்டனை அதிகம் கிடைக்கும் என்று.

இதனை நீதிபதி மற்றும் யூரிகள் ஏற்றுக்கொள்ளப் போவது இல்லை. வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. லண்டனில் கத்திக் குத்துச் சம்பவங்கள் பன் மடங்காக அதிகரித்துள்ளது. லேபர் அரசு இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். பொலிசாருக்கு அதி உச்ச அதிகாரங்களை கொடுத்தால் மட்டுமே இதனை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.