விஜய்க்கு ரஷ்ய பொலிசார் கடும் பாதுகாப்பு மொஸ்கோ நகரில் கெத்து காட்டும் தளபதி !

விஜய்க்கு ரஷ்ய பொலிசார் கடும் பாதுகாப்பு மொஸ்கோ நகரில் கெத்து காட்டும் தளபதி !

இன்றைய தினம் அவசரமாக டுபாய் புறப்பட்ட விஜய், டுபாய் சென்று அங்கிருந்து ரஷ்யா(மொஸ்கோ) செல்ல உள்ளார். டுபாயில் இருந்து எமரட்ஸ் விமானம் மூலம் மொஸ்கோ செல்லும் தளபதி வியஜ்கு ரஷ்யாவில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னரே, இந்தப் படப்பிடிப்பு தொடர்பாக ரஷ்ய உள்ளூர் சேவை திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டு உள்ளதாம். ஆனால்.

தற்போது இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து, ரஷ்யாவில் பொது இடங்களில் பாதுகாப்பு பன் மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில். தளபதி விஜய் அவர்களின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. அத்தோடு விஜய் துப்பாக்கிச் சண்டை போடும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதால், பாதுகாப்பு நடைமுறைகள் சற்று பலப்படுத்தப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் தளபதி விஜய் அவர்களுக்கு ஆயுதம் ஏந்திய பொலிசார் பாதுகாப்பு கொடுக்க உள்ளார்கள். ஏர் போட்டில் இருந்து ஹோட்டல் வரை இந்த பாதுகாப்பு இருக்கும் என்றும்.

பின்னர் தனியார் பாதுகாப்பு பிரிவை பயன்படுத்த வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் தற்போது குளிர் குறைந்துள்ளது. இதுவரை காலமும் -4 ல் இருந்தது. தற்போது உறையும் குளிர் குறைவடைந்துள்ளதால், படப்பிடிப்பை , அங்கே தொடங்குகிறார் வெங்கட் பிரபு.