உனக்கு என்ன தகுதி இருக்கு…? வில்லன் நடிகரை அசிங்கப்படுத்திய அமலா!

உனக்கு என்ன தகுதி இருக்கு…? வில்லன் நடிகரை அசிங்கப்படுத்திய அமலா!

இந்திய சினிமாவில் பிரபல வில்லன் நடிகரான ரகுவரன் பல்வேறு திரைப்படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். இவர் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மிரட்டலான வில்லன் நடிகராக நடித்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் தன் வசப்படுத்திக்கொண்டார்.

வில்லனாக நடித்தது மட்டும் இல்லாமல் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் எடுத்து பெரும் புகழ்பெற்ற நடிகராக சிறந்து விளங்கி வந்த ரகுவரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தனது வாழ்க்கையை இழந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

குடிப்பழக்கம் திரை வாழ்க்கையை மட்டும் இன்றி சொந்த வாழ்க்கையும் மிகப்பெரிய அளவில் பாதித்தது இவர் பிரபல நடிகையான ரோகிணியை காதல் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவருக்கு ஒரு மகன் பிறந்தார். இதனுடைய மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து சென்று விட்டார்கள்.

ரகுவரன் போதை பழக்கத்திலிருந்து விடுபட முயற்சி செய்தாலும் அவரால் அந்த பழக்கத்திலிருந்து மீண்டு வரவே முடியாத அளவுக்கு அதில் அவ்வளவு அடிமையாகி கிடந்தார். பின்னர் அவன் உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு பல பிரச்சினைகள் உடல் நிலையில் ஏற்பட்டு கடந்த கடந்த 2008 ஆம் ஆண்டு காலமானார்.

ரகுவரனின் நடிப்பு பாட்ஸா ,முதல்வன், ரட்சகன், முகவரி, சம்சாரம் அது மின்சாரம், ஏழாவது மனிதன் இந்த திரைப்படங்களில் அவரது அபார தனமான வில்ல நடிப்பு இன்றளவும் ரசிகர்களால் மறக்கவே முடியாது. அந்த அளவுக்கு மிகச்சிறந்த வில்லனாக இருந்த ரகுவரனின் வெற்றிடத்தை யாராலும் நிரப்பவே முடியாத அளவுக்கு இன்றும் காலியாகவே இருக்கிறது நிலையில் நடிகர் ரகுவரன் ரோகிணியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

நடிகர் ரகுவரன் ரோகிணியை காதலித்து திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர் பிரபல நடிகையான அமலாவை காதலித்து வந்தாராம். 1987 ஆம் ஆண்டு அமலா ரகுவரன் இருவரும் இணைந்து கூட்டுப் புழுக்கள் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்கள் இந்த படத்தின் போது ரகுவரனுக்கு அமலா மீது காதல் ஏற்பட்டதாம் இந்த காதலை அமலாவிடம் நேரடியாகவே சென்று கூறி இருக்கிறார்.

ஆனால் நீங்களோ வில்லன் நடிகர் உங்களுக்கு என்னை காதலிக்க என்னை திருமணம் செய்து கொள்ள என்ன தகுதி இருக்கு?உங்களுடன் சேர்ந்து வாழ்வதெல்லாம் கனவில் தான் கனவில் தான் நடக்கும். தயவு செய்து இதை மறந்து விடுங்கள் என கூறி காதலுக்கு மறுப்பு தெரிவித்துவிட்டாராம் அமலா. இதனால் அசிங்கப்பட்ட ரகுவரன் மிகுந்த வேதனையும் அடைந்தார். அதன் பின்னர் அமலா 1992 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரான நாகர்ஜூனாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.