கொலையாளி இன்னும் லண்டனில் ஓடிக்கொண்டு தான் இருக்கிறார்- பொலிசாரால் பிடிக்க முடியவில்லை !

கொலையாளி இன்னும் லண்டனில் ஓடிக்கொண்டு தான் இருக்கிறார்- பொலிசாரால் பிடிக்க முடியவில்லை !

ஹபீபர் என்ற இந்த 25 வயது இளைஞர், இன்றுவரை லண்டனில் ஓடிக்கொண்டு இருக்கிறார். மறைவாக இருக்கும் இவருக்கு, லண்டனில் யார் அடைக்கலம் கொடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. சில தினங்களுக்கு முன்னர் லண்டன் பிராட்பேஃட் நகரில் உள்ள, ஷாப்பிங் மால் ஒன்றில் வைத்து, தனது முன் நாள் காதலியை கத்தியால் குத்திக் கொலைசெய்த இன் நபர். முன் நாள் காதலியின் பிள்ளையையும் கொலைசெய்ய முற்பட்டார்.

ஆனால் அது பலிக்காமல் போகவே அங்கே இருந்து தப்பிச் சென்றுவிட்டார். முதல் நாள் அவருக்கு அடைக்கலம் கொடுத்த நபரை பொலிசார் தற்போது கைதுசெய்து விசாரித்து வரும் நிலையில். ஹபீபர் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளதோடு. ஐரோப்பிய விசாவை முதலில் பெற்று, பின்னர் பிரித்தானியா விசாவை எடுத்து லண்டன் வந்துள்ளார். அவர் கொலை செய்த பெண் அவரது முன் நாள் காதலி என்றும்.

அத்தோடு, குறித்த பெண்ணின் பிள்ளை இவரது பிள்ளையாக இருக்கக் கூடும் என்றும் பொலிசார் சந்தேகிக்கிறார்கள். இன் நிலையில் ஹபீபர் மிகவும், பயங்கரமான நபர் என்றும். திட்டமிட்டு கொலைசெய்வதில் வல்லவர் என்றும் பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இவரைக் கண்டால் கிட்ட நெருங்க வேண்டாம், உடனே பொலிசாருக்கு அறியத்தரவும் என்று, அவர்கள் வேலும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Source: https://www.dailymail.co.uk/news/article-13286121/Bangladeshi-murder-suspect-Habibur-Masum-hunted-police-mother-stabbed-death-baby-son-believed-father-child-ex-lover-victim.html