நடிக்க வந்த புதுசுலே மோசமாக நடந்துகிட்ட இயக்குனர் – சிம்ரன் என்ன பண்ணாங்க தெரியுமா?

நடிக்க வந்த புதுசுலே மோசமாக நடந்துகிட்ட இயக்குனர் – சிம்ரன் என்ன பண்ணாங்க தெரியுமா?

தமிழ் சினிமாவின் 90ஸ் காலகட்டத்தில் நடிக்க ஆரம்பித்து ஒட்டுமொத்த இளைஞர்களின் மனசையும் கொள்ளையடித்து சென்றவர் நடிகை சிம்ரன். இவர் மும்பையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனாலும் இவரது அழகும் ஒல்லி பெல்லி தோற்றமும் நடனமும் மக்களை கவர்ந்தது.

1977 ஆம் ஆண்டு வெளிவந்த ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சிம்ரன். தொடர்ந்து நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், கண்ணெதிரே தோன்றினால், வாலி, ஜோடி, பிரியமானவளே இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். நடிப்பை தாண்டி இவரது நடனமே மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

பிரபல டான்ஸ் மாஸ்டர் கலா சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சிம்ரன் குறித்த ஒரு ரகசிய விஷயத்தை கூறியுள்ளார். அதாவது சிம்ரனின் முதல் படம் மலையாள திரைப்படம் அந்த படத்தில் நான் தான் அவருக்கு நடன இயக்குனராக இருந்தேன். அதுதான் சிம்ரனின் முதல் திரைப்படம். அந்த படத்தில் அவர் நடிக்க வந்த புதுதில் அந்த குழந்தைக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால், ரொம்ப ஸ்டைல் பயங்கரமான attitude அதை பார்த்து நானே மிரண்டு போயிட்டேன்.

அந்த படத்தின் பாடல் காட்சிக்காக சூட்டிங் போயிட்டு இருக்கும்போது சிம்ரன் மேக்கப் மொத்தத்தையும் கலைச்சிட்டு இப்ப என்ன அவசரம் அங்க போயிட்டு போட்டுக்கலாம் அப்படின்ற மாதிரி அவங்க கலைச்சிட்டாங்க. ஆனா அங்க போய் இறங்குனது நாங்க 5 மணிக்கு தான் 6:30க்குள்ள 3 BGM எடுத்து முடிக்கணும் அதனால் சிம்ரன் முகத்தை பார்த்ததும் இயக்குனர் அதுக்குள்ள ஏன் மேக்கப் கலைச்சீங்கன்னு பயங்கரமா டென்சன் ஆகிட்டாரு.

உடனே நான் தான் அந்த டைரக்டர் கிட்ட பேசினேன். சார்… டென்ஷன் ஆகாதீங்க. அந்த பொண்ணு வேற லெவல் பண்ணிடும் அப்படின்னு நான் தான் நம்பிக்கை கொடுத்தேன். ஷூட் ஸ்டார்ட் பண்ண உடனே மூணு அட்டென்ட் டைம்ல 3 BGM’யையும் முடிச்சி கொடுத்து முடிச்சு அந்த இயக்குனர் என் வாயடைக்க வச்சுட்டாங்க சிம்ரன் என்று கலா மாஸ்டர் அந்த பேட்டியில் கூறினார். இதோ அந்த வீடியோ: