
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாகத் திகழ்பவர் ரகுல் பிரீத்சிங். 2009 ல் “கில்லி” படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து 2012 ல் “தடையரா தாக்க” என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். 2013 ல் ‘வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்’ படத்தில் நடித்துத் தெலுங்கில் ஹிட் கொடுத்தார்.
அதன் பின் தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது அயலான் மற்றும் இந்தியன் 2 வில் நடித்து வருகிறார். இந்நிலையில் IIFA வில் கலந்து கொண்ட சிங் இது எனது முதல் நிகழ்ச்சி என்பதால் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். நான் வளர்ந்து வரும் காலத்தில் வீட்டில் இந்த நிகழ்ச்சியை எப்பொழும் பார்த்துக் கொண்டிருப்பேன். IIFA அரங்கில் இதுவரை செய்யாத செயல் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். இந்நிலையில் IIFA வில் பாலிவுட்டின் கருப்பு வெள்ளை சகாப்த்தில் கலந்து கொண்ட சிங் வெள்ளை நிற மாடன் உடையில் போஸ் கொடுத்துள்ளார்.


