5 வித்தியாசமான வேடங்களில் ஹீரோவாகக் களமிறங்கும் எஸ் ஜே சூர்யா..

5 வித்தியாசமான வேடங்களில் ஹீரோவாகக் களமிறங்கும் எஸ் ஜே சூர்யா..

சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ மற்றும் கார்த்தி நடித்த சுல்தான் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் பாக்கியராஜ் கண்ணன். இரண்டு படங்களுமே மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு உருவானாலும் ரசிகர்களை பெரியளவில் கவரவில்லை.

இதனால் சுல்தான் படத்துக்குப் பிறகு அடுத்த பட வாய்ப்புக் கிடைக்காமல் இருந்து வந்தார் பாக்யராஜ் கண்ணன். இந்நிலையில் இப்போது அவர் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் ஒரு முழுநீள நகைச்சுவை படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

இந்த படம் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட கதையென சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா ஐந்து வித்தியாசமான வேடங்களில் நடிக்க போவதாகவும் சொல்லப்படுகிறது.