அம்மா மீது இம்புட்டு பாசமா? தாய் ஷோபாவிற்காக பிரம்மாண்டமான கோவில் கட்டிய விஜய்!

விஜய்

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகராகவும் தளபதி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். இவர் தந்தை எஸ் சி சந்திரசேகரன் இயக்கத்தில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து அதன் பின்னர் அவர் மூலமாக பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் விஜய் தனது திறமையால் தான் தனது வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டு தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து இன்று முன்னணி நடிகர் என்ற இடத்தில் தக்க வைத்திருக்கிறார்.

எனவே விஜய்யின் வளர்ச்சியில் முழுக்க முழுக்க அவரது திறமையும் அவரது பங்கும் உள்ளது. தொடர்ந்து முன்னணி நடிகராக இருந்தவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் எனும் திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு அடுத்ததாக தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார். அந்த படம் முடிந்த உடனே முழுமையாக அரசியல்வாதியாக இறங்க உள்ளார். இப்படியான நேரத்தில் விஜய் தனது தாய் சோபாவிற்காக பிரம்மாண்ட கோவில் ஒன்றை கட்டியிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகிய தீயாக பரவி வருகிறது.

ஆம், நேற்று விஜய் சாய் பாபா கோவிலில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளிவந்தது. அது சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றபோது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது எனக்கு கூறப்பட்டது. ஆனால் அது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படமே கிடையாதாம் நடிகர் விஜய் தனது தாய் சோபாவிற்காக தனது சொந்தமான நிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் சாய்பாபா கோவில் கட்டியுள்ளார்.

கோட்டூர் உள்ள தனது சொந்த இல்லத்தில் தன்னுடைய தாய்க்காக விஜய் கட்டியிருக்கும் இந்த சாய்பாபா கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.அங்கு விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது அத்துடன் கோட்டூர் புறத்தில் விஜய் கட்டிருக்கும் இந்த சாய்பாபா மந்திர் கோவிலின் புகைப்படங்கள் தற்போது வைரலாக வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அம்மா மீது விஜய்க்கு இம்புட்டு பாசமா என கூறி வருகிறார்கள்.